search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முனீஸ்வரன் கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு- கருப்பசாமி சிலையை திருடி சென்ற மர்மநபர்கள்
    X

    உடைக்கப்பட்ட சாமி சிலைகள்

    முனீஸ்வரன் கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு- கருப்பசாமி சிலையை திருடி சென்ற மர்மநபர்கள்

    • முனீஸ்வரன் கோவிலில் சுமார் 3 அடி உயரத்திற்கு கற்சிலையால் ஆன கருப்பசாமி சிலையை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
    • சிலைகள் உடைக்கப்பட்ட முனீஸ்வரன் கோவிலில் பாக்கம், வெங்கடாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம்-சித்தூர் சாலையில் பாக்கம் ஊராட்சி பாக்கம் ஏரிக்கரையில் காளியம்மன் கோவில் உள்ளது.

    அதன் அருகிலேயே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் சார்பில் முனீஸ்வரன் கோவில் அமைக்கப்பட்டது.

    இந்த முனீஸ்வரன் கோவிலில் சுமார் 3 அடி உயரத்திற்கு கற்சிலையால் ஆன கருப்பசாமி சிலையை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கோவிலில் இருந்த 2 சாமி சிலைகளை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்தனர். மேலும் கோவிலில் இருந்த கருப்பசாமி சிலையை திருடி சென்று விட்டனர்.

    இன்று காலையில் கோவிலில் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    சிலைகள் உடைக்கப்பட்ட முனீஸ்வரன் கோவிலில் பாக்கம், வெங்கடாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டனர்.

    இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு குடியாத்தம் டி.எஸ்.பி. ராமமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    சுற்றுப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் கிணற்றில் கருப்பசாமி சிலையை வீசி சென்றுள்ளனரா என ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×