search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அகண்ட பாரதத்தை உருவாக்க சிறிது காலம் காத்திருக்க வேண்டும்- மோகன் பகவத்
    X

    அகண்ட பாரதத்தை உருவாக்க சிறிது காலம் காத்திருக்க வேண்டும்- மோகன் பகவத்

    • செய்யூர் அருகே உள்ள நீலமங்கலம் கிராமத்தில் பாரத மாதா கோவில் கட்டப்பட்டு உள்ளது.
    • இந்திய மக்கள் அனைவரும் உழைப்பு மற்றும் நிதி ஆதாரத்தையும் அளியுங்கள்.

    மதுராந்தகம்:

    செய்யூர் அருகே உள்ள நீலமங்கலம் கிராமத்தில் பாரத மாதா கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் அகண்ட பாரதம் என்ற நூலை வெளியிட்டார். பின்னர் மோகன் பகவத் பேசியதாவது:-

    ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடங்கி 98 ஆண்டுகள் ஆகிறது. இந்த இயக்கம் அகண்ட பாரதத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்டது.

    அகண்ட பாரதத்தை நாம் உருவாக்குவோம். அதற்கு சிறிது காலம் நாம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்காக இந்திய மக்கள் அனைவரும் உழைப்பு மற்றும் நிதி ஆதாரத்தையும் அளியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இன்று மாலை 4 மணியளவில் ராமர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் விசுவ இந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் பங்கேற்கிறார்.

    Next Story
    ×