search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உணவுக்குழாய் புற்று நோய்க்கு முதல் முறையாக நவீன அறுவை சிகிச்சை
    X

    உணவுக்குழாய் புற்று நோய்க்கு முதல் முறையாக நவீன அறுவை சிகிச்சை

    • தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
    • தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு 20 நாட்களுக்கு பிறகு குணமடைந்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த மதுரை வீரன் மனைவி அமராவதி (வயது 45). கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக சரியாக சாப்பிட முடியாமல் உடல் எடை குறைந்து சோர்வுடன் காணப்பட்டார்.

    இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அமராவதிக்கு உணவுக்குழாயில் புற்று நோய் பாதித்திருப்பதை உறுதி செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து அவருக்கு கடந்த மாதம் 8-ந் தேதி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. டாக்டர்கள் முத்துலெட்சுமி நாராயணன், குடல் இரைப்பை சிறப்பு மருத்துவர் அசோக்குமார் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் அமராவதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

    இதனையடுத்து அவர் பூரண குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். தனியார் ஆஸ்பத்திரியில் மட்டுமே செய்யப்படும் இது போன்ற அறுவை சிகிச்சையை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் செய்து அமராவதி குணமடைந்ததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

    இது குறித்து கல்லூரி டீன் பாலசங்கர் கூறுகையில், உணவுக்குழாய் புற்று நோய் ஏற்பட்டால் மார்பை கிழித்து அறுவை சிகிச்சை செய்வதுதான் வழக்கம். ஆனால் அமராவதிக்கு கழுத்து, வயிறு பகுதியில் துளையிட்டு புற்று நோய் பாதித்த உணவுக்குழாய் பகுதியை அகற்றி செயற்கை உணவுக்குழாய் பொருத்தப்பட்டது.

    அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு 20 நாட்களுக்கு பிறகு குணமடைந்தார். சவால் நிறைந்த இந்த அறுவை சிகிச்சை தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது என்றார்.

    Next Story
    ×