search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னன் கைது
    X

    கார்த்திக்

    3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னன் கைது

    • முதல் மனைவிக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணை 2-வதாக கார்த்திக் திருமணம் செய்து கொண்டார்.
    • கார்த்திக்கின் லீலைகள் குறித்து அந்த 3 பெண்களுக்கு தெரிய வந்துள்ளது.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுக்கா உத்தனப்பள்ளி ஊராட்சி சின்ன லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சப்பா. இவரது மகன் கார்த்திக் (வயது23). பொக்லைன் டிரைவான இருவருக்கும், உத்தனப்பள்ளியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 மாதத்தில் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் முதல் மனைவிக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணை 2-வதாக கார்த்திக் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அவர் சமீபத்தில் விவசாய வேலைக்கு செல்லும் பெண்ணை கோவிலில் தாலி கட்டி 3-வதாக திருமணம் செய்து கொண்டார். பல நாட்களாக 3 பேருடன் மாறி மாறி குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் கார்த்திக்கின் லீலைகள் குறித்து அந்த 3 பெண்களுக்கு தெரிய வந்துள்ளது.

    இதனால் பாதிக்கப்பட்ட 3 பேரும் தங்களது பெற்றோருடன் உத்தனப்பள்ளி போலீசில் புகார் அளித்தனர்.

    அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

    பின்னர், அவரை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் போலீசார் அடைத்தனர்.

    Next Story
    ×