search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு 18-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் லெட்சுமிபதி அறிவிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு 18-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் லெட்சுமிபதி அறிவிப்பு

    • கந்த சஷ்டி திருவிழா இந்த ஆண்டு வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.
    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது.

    தூத்துக்குடி:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது. அவற்றில் முக்கியமானது கந்த சஷ்டி திருவிழாவாகும்.

    இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்நிலையில் வருகிற 18-ந் தேதி கந்த சஷ்டி திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் லெட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுவதை முன்னிட்டு அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

    எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தாது. இது செலாவணி முறி சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல என தெரிவிக்கப்படுகிறது.

    இந்த விடுமுறைக்கு பதிலாக அடுத்த மாதம் 9-ந் தேதி (சனிக்கிழமை) மாற்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×