search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறுத்தை தாக்கியதில் காயம் அடைந்த பெண் பலி
    X

    சிறுத்தை தாக்கியதில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சரிதா

    சிறுத்தை தாக்கியதில் காயம் அடைந்த பெண் பலி

    • காயம் அடைந்த 3 பேருக்கும் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
    • சரிதா என்ற இளம்பெண் மட்டும் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது.

    இந்த சிறுத்தை அவ்வப்போது ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.

    ஏலமண்ணா பகுதியில் கடந்த 21-ந் தேதி காலை புகுந்த சிறுத்தை அந்த பகுதியை சேர்ந்த சரிதா(வயது29), துர்கா(55), வள்ளியம்மாள் ஆகிய 3 பெண்களை சிறுத்தை தாக்கியது.

    இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதனை அறிந்த மக்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். அத்துடன் அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தி, சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.

    காயம் அடைந்த 3 பேருக்கும் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவர்களில் சரிதா என்ற இளம்பெண் மட்டும் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி சரிதா பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

    இந்த தகவல் அவர்களது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமானோர் அரசு ஆஸ்பத்திரியில குவிந்தனர். அவர்கள் சரிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×