என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்- அரசு சார்பில் மரியாதை
    X

    கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்- அரசு சார்பில் மரியாதை

    • தனது பாடல்கள் மூலம் பாமரர்களிடம் கொண்டு சேர்த்த மாபெரும் கவிஞர் கவியரசு கண்ணதாசன்.
    • கவியரசு கண்ணதாசனின் 98-வது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ படத்திற்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

    சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும், சிற்றிலக்கியங்களிலும் உள்ள அற்புதமான கருத்துகளை எளிமைப்படுத்தி, தனது பாடல்கள் மூலம் பாமரர்களிடம் கொண்டு சேர்த்த மாபெரும் கவிஞர் கவியரசு கண்ணதாசன்.

    அவரது திரையிசைப் பாடல்கள் இசை நூலில் கோர்க்கப்பட்ட வார்த்தை மணிகள் அல்ல; வாழ்க்கையை சாறுபிழிந்து வடிகட்டிய தேனமுது.

    கவியரசு கண்ணதாசனின் 98-வது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ படத்திற்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

    சென்னை தி.நகரில் கண்ணதாசன் திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் சாமிநாதன், கவியரசு கண்ணதாசன் குடும்பத்தினர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    Next Story
    ×