என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வைரக்கல் பதித்த வளையல் காணிக்கை
- காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
- வைர வளையல் உடனடியாக காமாட்சி அம்மனுக்கு சாற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலில் தரிசனம் செய்ய தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
தற்போது மாசி மக பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. தினந்தோறும் காலை,மாலை இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் காமாட்சி அம்மன், லட்சுமி-சரஸ்வதியுடன் 4 ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.இந்தநிலையில் கோவில் மூலவரான காமாட்சி அம்மனுக்கு மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் அஜய் கிருஷ்ணமூர்த்தி என்பவர் 26 வைர கற்கள் பதித்த ஒரு ஜோடி வளையல்களை காணிக்கையாக வழங்கி உள்ளார். இதனை அவரது சார்பில் சென்னையைச் சேர்ந்த ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் நடராஜன் கோவில் அர்ச்சகர் சுந்தரேசனிடம் வழங்கினார். இந்த வைர வளையல் உடனடியாக காமாட்சி அம்மனுக்கு சாற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.






