search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் வீடு உள்பட 6 இடங்களில் 3-வது நாளாக சோதனை
    X

    ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் வீடு உள்பட 6 இடங்களில் 3-வது நாளாக சோதனை

    • நேற்று 2-வது நாளாக 6 இடங்களில் சோதனை நடைபெற்றது.
    • சோதனை நடைபெற்ற இடங்களில் இருந்து, வருமான வரித்துறையினர் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    கோவை:

    ஈரோட்டை சேர்ந்த சதாசிவம் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து கோவை காளப்பட்டி பகுதியில் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிறுவனம் மற்றும் சூலூர் அருகே பட்டணம் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ராமநாதன் வீடு, அவருடைய மகன் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் கடந்த 2-ந்தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வந்த புகாரின்பேரில் இந்த சோதனை நடந்தது. நேற்று 2-வது நாளாக 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. இன்று 3-வது நாளாக சோதனை நீடிக்கிறது.

    கோவை காளப்பட்டியில் உள்ள கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இன்றும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். இதேபோல் பட்டணத்தை சேர்ந்த ராமநாதனின் வீடு, அவருடைய அலுவலகம், மகன் வீடுகளிலும் அதிரடி சோதனை நடந்தது. வீட்டில் உள்ள அறைகள் ஒவ்வொன்றிலும் அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்டனர்.

    இதுதவிர ராமநாதனின் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்கி இருக்கும் நாயக்கன்பானையம், ராமலிங்கம் நகரில் உள்ள வீடு, கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள பம்புசெட் நிறுவன உரிமையாளரின் வீட்டிலும் இன்று 3-வது நாளாக சோதனை நடந்தது.

    சோதனை நடைபெற்ற இடங்களில் இருந்து, வருமான வரித்துறையினர் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.

    சோதனை முடிவடைந்த பிறகே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது தெரியவரும். சோதனை நடைபெற்று வரும் இடங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×