search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் அதிபர் ஆட்சியை கொண்டுவர பா.ஜ.க முயல்கிறது-  முத்தரசன் குற்றச்சாட்டு
    X

    ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் அதிபர் ஆட்சியை கொண்டுவர பா.ஜ.க முயல்கிறது- முத்தரசன் குற்றச்சாட்டு

    • ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுக ஆதரிப்பதில் ஆச்சரியம் இல்லை.
    • ஆளுநர் பதவியை முற்றிலுமாக முறியடிக்க வேண்டும்.

    ராயபுரம்:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் பா. ஜீவானந்தம் 60 -ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை, காசிமேட்டில் உள்ள நினைவிடத்தில் மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மூத்த தலைவர் நல்லகண்ணு, மறைந்த பா. ஜீவானந்தத்தின் பெருமைகளை எடுத்துரைத்தார்.

    அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன். இலக்கிய பேராசிரியர் ஜீவானந்தம் பற்றி தமிழகம் நன்கு அறிந்த ஒரு தலைவர் என்றும், மிகப்பெரிய புரட்சியாளராகவும் நாட்டின் விடுதலைக்காக போராடினார்.

    அதற்காக பல ஆண்டுகள் சிறை தண்டனைகளை அனுபவித்தார் என்றும் தெரிவித்தார்.மேலும் தந்தை பெரியாருடைய நினைவு பகுத்தறிவு பிரச்சாரத்தையும் செய்தார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு இவரும் ஒரு முக்கிய புள்ளியாக இருந்தவர்.

    இலக்கியத்தில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற இருந்தவர் எனவும் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலைஞர்களோடும் கலைஞர், எம்ஜிஆர் அவர்களுடன் நட்போடு இருந்தவர். ராஜாஜி, பெரியார், அண்ணா, கலைஞர் என அனைத்து தலைவர்களுடனும் பணியாற்றியவர், தனது வாழ்க்கை முழுவதும் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் பணியாற்றினார். மேலும் நாட்டில் பரப்புவாதம் தலை தூக்கி நிற்கிறது நாட்டையே தலைகீழாக திருப்ப முயற்சி நடந்து கொண்டிருக்கிறது, ஒரே நாடு ஒரே தேர்தல் என்று மதத்தின் பெயரால்

    கடவுளின் பெயரால் நாட்டு மக்களை பிளவு படுத்தி தங்களது சுயநலக் கொள்கையை பயன்படுத்தி மக்களை பிரிக்க நினைக்கின்றனர்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டு வர பா.ஜ.க. முயலுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுக ஆதரிப்பதில் ஆச்சரியம் இல்லை 2024-ம் ஆண்டு சட்டசபையோடு சேர்ந்து தேர்தல் வந்தால் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று குறுகிய ஆசையை அ.தி.மு.க. வைத்துள்ளார்.

    ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தபோது இதை ஏற்கவில்லை. இதை யாராலும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அ.தி.மு.க. கொள்கைக்கு இது எதிரானது என்றும் தெரிவித்தார். ஒரு கட்சி ஆட்சியாக இருக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் கொள்கை அதை கொஞ்சம் கொஞ்சமாக பிஜேபி செய்து வருகிறது. மதவாததிற்கும் தமிழ்நாடு என்ற பெயருக்கும் தமிழர்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.

    ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டாம். ஆளுநர் பதவியை முற்றிலுமாக முறியடிக்க வேண்டும்.

    மேலும் ஒரு ஒப்புக்காக ஒரே நாடு ஒரே தேர்தலை ஏற்றுக் கொள்வதாக வைத்திருந்தாலும் 2024 -ம் ஆண்டு வெற்றி பெற்றால் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் என்பதற்கு என்ன சாட்சி.

    ஒன்றிய அரசை கலைத்து விட்டு திரும்பத் திரும்பத் தேர்தல் நடத்த நமது நாடு தயாராக இருக்கும் எனவும் கூறினார்.

    Next Story
    ×