search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பவானியில் இன்று மாலை பா.ம.க. பொதுக்கூட்டம்- அன்புமணி பங்கேற்பு
    X

    பவானியில் இன்று மாலை பா.ம.க. பொதுக்கூட்டம்- அன்புமணி பங்கேற்பு

    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
    • அன்புமணி ராமதாஸ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை.

    பவானி:

    பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து அன்புமணி ராமதாஸ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் பா.ம.க. தலைவராக பொறுப்பேற்று கொண்ட பிறகு அன்புமணி ராமதாஸ் முதல் முறையாக ஈரோடு மாவட்டத்துக்கு இன்று (சனிக்கிழமை) வருகிறார். தொடர்ந்து அவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    இதைதொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் பவானி வி.என்.சி. கார்னர் தேர்வீதி பகுதியில் பா.ம.க. பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு சிற்ப்புறை ஆற்றுகிறார்.

    மேலும் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., வன்னியர் சங்க மாநில செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இதில் ஈரோடு, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.

    முன்னதாக இன்று மாலை அன்புமணி ராமதாசுக்கு மத்திய மாவட்ட பா.ம.க. சார்பில் லட்சுமி நகர் பைபாஸ் அருகே வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து கட்சி கொடி ஏற்றி வைத்து பேசுகிறார்.

    அங்கு இருந்து பவானி செல்லும் அவருக்கு கூடுதுறை பாலம் அருகே வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் பவானியில் நடக்கும் பொது க்கூட்டத்தில் பேசுகிறார்.

    இதை தொடர்ந்து இன்று இரவு ஈரோடு வில்லசம்பட்டியில் தங்குகிறார். இதையடுத்து நாளை காலை ஈரோட்டில் இருந்து நசியனூர், காஞ்சிகோவில், கவுந்தப்பாடி, கோபி செட்டிபாளையம் பகுதிகளுக்கு அவர் சென்று பா.ம.க. கொடி ஏற்றி வைத்து தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார்.

    தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையடுத்து அவர் அங்கு இருந்து செல்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை பா.ம.க. நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×