என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொடைக்கானலில் இன்று நூற்றாண்டின் கலப்பின சூரிய கிரகணத்தை காண ஏற்பாடு
    X

    சூரிய கிரகணத்தின் நிகழ்வு.

    கொடைக்கானலில் இன்று நூற்றாண்டின் கலப்பின சூரிய கிரகணத்தை காண ஏற்பாடு

    • பெரும்பாலான கடல் பகுதிகளில் மட்டுமே தென்பட்ட இந்த கலப்பின சூரிய கிரகணம் ஒரு சில தரைத்தளங்களிலும் தென்பட்டது.
    • சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் இந்த நூற்றாண்டுகளில் முதன்முறையாக நிகழ்ந்த முழு சூரிய கிரகணம் என்ற "கலப்பின" சூரிய கிரகணம் இந்திய நேரப்படி காலை 7.27 மணிக்கு தொடங்கி நிகழ்ந்தது.

    வானில் பல அரிய நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதேபோன்று சூரிய கிரகணமும் ஒரு அரிய நிகழ்வாகும். இதிலும் அரிய நிகழ்வாக பார்க்கக்கூடிய கலப்பின சூரிய கிரகணம் இன்று இந்திய நேரப்படி காலை 7.27க்கு ஆரம்பமானது. இதனுடைய உச்சபட்ச நிலையை 8:50க்கு பார்க்க முடிந்தது. மேலும் சூரிய கிரகணம் மொத்தமாக 3 வகைகளாக உள்ளது.

    பகுதி, முழு நேரம், வருடாந்திரம் நடக்கக்கூடிய சூரிய கிரகணங்கள் இதில் அடங்கும். குறிப்பாக இன்று 3 வகையான கிரகணங்களும் ஒன்றிணைந்ததால் இதனை கலப்பின சூரிய கிரகணம் என்று அழைப்பதுண்டு. மேலும் இதுபோன்ற கலப்பின சூரிய கிரகணம் நூற்றாண்டுகளில் ஒரு சில வருடங்கள் மட்டுமே நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த நூற்றாண்டின் முதன்முறையாக கலப்பின சூரிய கிரகணம் இன்று தென்பட்டது.

    குறிப்பாக பெரும்பாலான கடல் பகுதிகளில் மட்டுமே தென்பட்ட இந்த கலப்பின சூரிய கிரகணம் ஒரு சில தரைத்தளங்களிலும் தென்பட்டது. ஆஸ்திரேலியா, இந்தோனேசியா உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் தெளிவாக தென்பட்டது. மேலும் இந்த சூரிய கிரகணங்களால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதே போன்று அடுத்து வரக்கூடிய கலப்பின சூரிய கிரகணம் 2172-ம் ஆண்டு தான் நிகழும் என்று கூறப்படுகிறது.

    பெரும்பாலும் ஆஸ்திரேலியா நாட்டில் தென்படுவதால் ஆஸ்திரேலியாவில் உள்ள நீங்கலோ கடலின் பெயரை இந்த சூரிய கிரகணத்திற்கு பெயர் வைத்துள்ளது. இதற்காக இந்த சூரிய கிரகணம் நீங்கலோ என்று அழைக்கப்படுகிறது. கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. காலை 11 மணிக்கு மேல் அதிக அளவில் மாணவர்கள் வந்து இதில் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கொடைக்கானல் வான் இயற்பியல் தலைமை விஞ்ஞானி டாக்டர். எபினேசர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×