search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
    X

    ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

    • கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    பென்னாகரம்:

    கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனால் நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படியும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர். மெயின் அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×