search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒகேனக்கல் நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
    X

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. 

    ஒகேனக்கல் நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிற நிலையில் தமிழக காவிரி கரையோர எல்லை பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகின்றன.
    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிக அளவில் ஏற்பட்ட நீர்வரத்தால் ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் கரையோர பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கலில் நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் மழை குறைந்ததால், கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும், தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.

    மேலும், கர்நாடகா மாநிலத்தில் தண்ணீர் விட மறுத்து அந்த மாநில அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

    இதன் காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி அளவில் வினாடிக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகாவில் மழை பொய்த்து போனதால் கடந்த சில நாட்களாக அங்குள்ள அணைகளில் இருந்து நீர்திறப்பு முற்றிலும் நிறுத்திவிட்டதால், தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது.

    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடையும். கடந்த சில நாட்களாக கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், அவ்வப்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையாலும் கடந்த 2 தினங்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 1500 கனஅடியாக நீடித்து வந்து கொண்டிருந்தது.

    இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் அளவு குறைந்து பாறை திட்டுகளாக காட்சியளித்தது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிற நிலையில் தமிழக காவிரி கரையோர எல்லை பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகின்றன.

    இதனால் தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நேற்று வரை வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்தானது படிப்படியாக தற்போது அதிகரித்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.

    திடீரென ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிக அளவில் ஏற்பட்ட நீர்வரத்தால் ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.

    மேலும் தற்போது 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள இந்த நீர்வரத்து, பெய்யும் மழையைப் பொறுத்து அதிகரிக்கவோ குறையவோ வாய்ப்பு உள்ளது என கருதப்படுகிறது.

    Next Story
    ×