search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரிட்ஜில் மின்கசிவு: வீடு தீப்பிடித்து எரிந்ததில் மூதாட்டி-பேரன் உயிர் தப்பினர்
    X

    பிரிட்ஜில் மின்கசிவு: வீடு தீப்பிடித்து எரிந்ததில் மூதாட்டி-பேரன் உயிர் தப்பினர்

    • அதிகாலை அஸ்வின் எழுந்தபோது வீடு முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.
    • அஸ்வினும், அல்லியும் உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த சேலையூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் அல்லி(60). இவர் நேற்று இரவு தனது பேரன் அஸ்வினுடன் வீட்டில் தூங்கினார். இன்று அதிகாலை அஸ்வின் எழுந்தபோது வீடு முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. மேலும் சமையல் அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் பற்றி எரிந்தன. இதையடுத்து அஸ்வினும், அல்லியும் உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பிரிட்ஜில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    வீட்டில் தீப்பற்றியதும் அல்லியும், அவரது பேரன் அஸ்வினும் வெளியே வந்ததால் உயிர் தப்பினர். இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×