search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பூர் தொழிலதிபர்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் கைது
    X

    திருப்பூர் தொழிலதிபர்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் கைது

    • மீண்டும் 26-ந் தேதி அதே பெண், என்னை தொடர்பு கொண்டு மசாஜ் செய்ய வரட்டுமா? என்றார்.
    • கோகுல்ராஜ், யுவராஜ், புஷ்பலதா ஆகியோரால் பாதிக்கப்பட்டோர் புகார் தெரிவித்தால் 3 பேர் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி மேற்குபதி அவரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 63). இவர் பெருமாநல்லூர் அருகே மொய்யாண்டம்பாளையத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த 2-ந்தேதி பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், கடந்த மாதம் 24-ந்தேதி என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஒரு பெண், மசாஜ் செய்ய விருப்பம் இருந்தால் அழையுங்கள் என்றார். நான் சரி என்றதும் அன்று இரவு அந்த பெண் எனது பர்னிச்சர் கடைக்கு அருகே உள்ள அறைக்கு வந்து மசாஜ் செய்து விட்டு ரூ.1,200 வாங்கி சென்றார்.

    பின்னர் மீண்டும் 26-ந் தேதி அதே பெண், என்னை தொடர்பு கொண்டு மசாஜ் செய்ய வரட்டுமா? என்றார். அன்று இரவு அதேபோல் அறைக்கு வந்து மசாஜ் செய்தபோது திடீரென்று அறைக்குள் 2 பேர் அத்துமீறி நுழைந்தனர். கத்தியை காட்டி மிரட்டி என்னுடைய ஆடைகளை களைய சொன்னார்கள்.

    பின்னர் அந்த பெண்ணையும், என்னையும் சேர்த்து வைத்து நிர்வாணமாக படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் என்னிடம் இருந்து 1 பவுன் தங்க மோதிரம், ஏ.டி.எம். கார்டு, ரகசிய எண்ணை பறித்தனர். ரூ.2 லட்சம் கொடு, இல்லாவிட்டால் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவோம் என்று மிரட்டிவிட்டு அந்த பெண் உள்பட 3 பேரும் சென்று விட்டனர். அந்த பெண்ணும் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகு எனது ஏ.டி.எம். கார்டில் இருந்து அடிக்கடி பணம் எடுக்கப்பட்டது. தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதைத்தொடர்ந்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்டம் சின்னாண்டவர் கோவில் ரோட்டை சேர்ந்த கோகுல்ராஜ் (21), அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் (21), உடுமலை எலையமுத்தூரை சேர்ந்த புஷ்பலதா (30) ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தது. கோகுல்ராஜ், யுவராஜ், புஷ்பலதா ஆகியோர் மசாஜ் செய்வதாக கூறி சண்முகராஜ் மட்டுமின்றி திருப்பூர் மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த தொழிலதிபர்களை வரவழைத்து நிர்வாண வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்கள் வைத்திருந்த செல்போன்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதில் ஏராளமான தொழிலதிபர்கள் மற்றும் வாலிபர்களின் நிர்வாண புகைப்படங்கள் இருந்தது. அவர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசில் புகார் தெரிவித்தால் அவமானமாகி விடும் என்பதால் யாரும் புகார் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இதனை தங்களுக்குசாதகமாக பயன்படுத்தி கொண்ட 3 பேரும் தொழிலதிபர்களை மிரட்டி அவ்வப்போது பணம் பறித்து வந்துள்ளனர். சண்முகராஜூம் முதலில் புகார் தெரிவிக்காமல் இருந்துள்ளார். 3 பேர் கும்பல் பணம் கேட்டபோது அவர் அணிந்திருந்த செயின், மோதிரத்தை விற்று பணம் கொடுத்துள்ளார். இது அவரது மனைவிக்கு தெரியவரவே , அதன்பிறகே அவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

    கோகுல்ராஜ், யுவராஜ், புஷ்பலதா ஆகியோரால் பாதிக்கப்பட்டோர் புகார் தெரிவித்தால் 3 பேர் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். மசாஜ் செய்வதாக கூறி அழைத்து தொழிலதிபர்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×