என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஓட்டல்கள், டீக்கடைகளில் நிரம்பி வழியும் கூட்டம்- 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு
    X

    ஓட்டல்கள், டீக்கடைகளில் நிரம்பி வழியும் கூட்டம்- 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு

    • அரசியல் கட்சி பிரமுகர்கள் வாடகைக்கு வீடு தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    • ஈரோட்டில் எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரின் நடமாட்டமாகவே உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தலில் பணியாற்ற அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஈரோட்டில் திரண்டு உள்ளனர்.

    அவர்கள் தேர்தல் தொடர்பான ஆலோசனை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி, பிரசாரம் போன்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் தேர்தல் பணியாற்ற ஈரோடுக்கு வந்து இருப்பதால் இங்கு உள்ள ஓட்டல்கள், டீக்கடைகளில் அரசியல் கட்சியினரின் கூட்டம் அலைமோதுகிறது.

    இதனால் 200, 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் கடைக்காரர்கள் சில்லரை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    இதே போல் அரசியல் கட்சி பிரமுகர்கள் வாடகைக்கு வீடு தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். வீட்டின் வசதியை பொறுத்து மாத வாடகையாக ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையிலும், பங்களா போல்இருந்தால் ரூ. 1 லட்சம் வரை வீட்டு உரிமையாளர்கள் கேட்கின்றனர்.

    தங்கும் விடுதி, ஓட்டல்களில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் தங்கியுள்ளனர். தொண்டர்கள் தங்க வாடகைக்கு வீடு தேடும் பணியில் உள்ளுர் கட்சிகாரர்கள் உதவியுடன் வெளியூர் அரசியல்வாதிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஈரோட்டில் எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரின் நடமாட்டமாகவே உள்ளது.

    ஈரோடு நகர பகுதியில் வீடு வாடகை அதிகமாக இருப்பதால் சிறிய சிறிய கட்சியினர் ஈரோட்டில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள சோலார், திண்டல், கஸ்பாபேட்டை, ரங்கம்பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வீடுகளை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×