search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    என்ஜினீயரிங் கவுன்சிலிங் இந்த மாத இறுதியில் தொடங்குகிறது
    X

    என்ஜினீயரிங் கவுன்சிலிங் இந்த மாத இறுதியில் தொடங்குகிறது

    • கலந்தாய்வு தள்ளிப் போவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
    • கவுன்சிலிங் தாமதத்தால் முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஆகும்.

    சென்னை:

    அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள 460 கல்லூரிகளில் 2023-24-ம் கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் இளங்கலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்க 1.78 லட்சம் மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

    இதில் திருச்செந்தூரை சேர்ந்த மாணவி நேத்ரா முதலிடத்தை பிடித்தார். 102 பேர் 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றனர். இதில் 100 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் ஆவர்.

    என்ஜினீயரிங் கவுன்சிலிங் இன்று (ஜூலை 2-ந்தேதி) தொடங்கும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கலந்தாய்வு தள்ளிப் போவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

    மருத்துவ கலந்தாய்வுக்கான முதல்கட்ட கவுன்சிலிங் தொடங்கிய பின்னர் என்ஜினீயரிங் கவுன்சிலிங் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    மருத்துவ சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் (ஆகஸ்ட்) முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ கவுன்சிலிங் இந்த மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் தொடங்கும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, 'மருத்துவ கவுன்சிலிங்கிற்கு பிறகே என்ஜினீயரிங் கவுன்சிலிங் நடத்தப்படும். கவுன்சிலிங் தாமதத்தால் முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஆகும். கவுன்சிலிங் 4 சுற்றுகளாக குறைந்தது 2 மாதங்கள் நடைபெறும்.

    ஆகஸ்ட் மாதத்தில் கவுன்சிலிங் தொடங்கினால், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும்' என்றார்.

    Next Story
    ×