search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திசையன்விளை அருகே அறுந்து விழுந்த மின்வயரில் சிக்கி 2 மாடுகள் பலி
    X

    மின்சாரம் தாக்கி பலியான மாடுகள்.

    திசையன்விளை அருகே அறுந்து விழுந்த மின்வயரில் சிக்கி 2 மாடுகள் பலி

    • இடையன்குடி அருகே உள்ள தேரி பகுதியில் சென்றபோது அங்கு சாலையில் மின்வயர் ஒன்று அறுந்து கிடந்தது.
    • உவரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியை சேர்ந்தவர் பால் (வயது60). விவசாயி. இவரது பேரன் இசக்கிமுத்து.

    இந்நிலையில் இன்று காலை பால் தனது பேரன் இசக்கிமுத்துவுடன் உவரி அருகே உள்ள தோட்டத்திற்கு மாட்டு வண்டியில் சென்றனர். அவர்கள் இடையன்குடி அருகே உள்ள தேரி பகுதியில் சென்றபோது அங்கு சாலையில் மின்வயர் ஒன்று அறுந்து கிடந்தது. அதில் மாடுகள் சிக்கியதால் அதன் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதனால் 2 மாடுகளும் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பால் மற்றும் இசக்கிமுத்துவிற்கு காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்ததும் உவரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×