search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடம்பூர் வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் யானை- வனத்துறையினர் விசாரணை
    X
    வனப்பகுதியில் இறந்து கிடந்த யானையை படத்தில் காணலாம்.

    கடம்பூர் வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் யானை- வனத்துறையினர் விசாரணை

    • குத்தியாலத்தூர் கிராமம் பெரிய குன்றி வனப்பகுதியில் கடம்பூர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • அடர்ந்த வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட குத்தியாலத்தூர் கிராமம் பெரிய குன்றி வனப்பகுதியில் கடம்பூர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அடர்ந்த வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இது குறித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கடம்பூர் வனச்சரக அலுவலர் இந்துமதி, வன கால்நடை உதவி மருத்துவர் மற்றும் வனத்துறையினர் வந்தனர். பின்னர் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதில் வயது முதிர்வு காரணமாக யானை இறந்தது தெரிய வந்தது.

    Next Story
    ×