search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாமியார் இறந்த சோகத்தில் மருமகள் தற்கொலை
    X

    மாமியார் இறந்த சோகத்தில் மருமகள் தற்கொலை

    • கடந்த ஜூன் 1-ந்தேதி செல்வத்தின் தாய் தெய்வானை இறந்து போனார்.
    • மாமியார் இறப்பால் மணிமேகலை மிகவும் மனவேதனையில் இருந்தார்.

    திருவள்ளூர்:

    திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே உள்ள விளக்கணாம்பூடி மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மணிமேகலை(வயது56).

    கடந்த ஜூன் 1-ந்தேதி செல்வத்தின் தாய் தெய்வானை இறந்து போனார். மாமியார் இறப்பால் மணிமேகலை மிகவும் மனவேதனையில் இருந்தார்.

    இந்த நிலையில் அன்று இரவே மணிமேகலை தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அவரது உடல் நிலை மோசம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிசிச்சை பலனின்றி மணிமேகலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×