search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாண்டஸ் புயல்- ஆம்னி பஸ்கள் இன்று வழக்கம்போல் ஓடும்
    X

    மாண்டஸ் புயல்- ஆம்னி பஸ்கள் இன்று வழக்கம்போல் ஓடும்

    • சென்னையில் மாநகர பஸ்கள் இரவு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • கிழக்கு கடற்கரை சாலை வழியாக புயல் கடக்கக்கூடிய குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பஸ்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. சென்னையில் மாநகர பஸ்கள் இரவு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு கடற்கரை சாலை வழியாக புயல் கடக்கக்கூடிய குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பஸ்களை இயக்க வேண்டாம். என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலூர், மாமல்லபுரம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள், வரக்கூடிய பஸ்கள் நள்ளிரவில் மாற்றுப்பாதையில் இயக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் கோயம்பேட்டில் இருந்து இன்று ஆம்னி பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×