search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் சைபர் கிரைம் போலீஸ் நவீனமாகிறது- ரூ.28 கோடியில் புதிய கருவிகள் வாங்க முடிவு
    X

    தமிழகத்தில் சைபர் கிரைம் போலீஸ் நவீனமாகிறது- ரூ.28 கோடியில் புதிய கருவிகள் வாங்க முடிவு

    • ​​15 பேர் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றனர். நடவடிக்கை எடுக்க ஒரு குழுவும், பின்தொடர்வதற்காக மற்றொரு குழுவும் உள்ளது.
    • கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 80,148 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 46 சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள் உள்ளது. 1930 ஹெல்லைன் நம்பர் மூலம் பெறப்படும் அழைப்புகள் குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    சைபர் கிரைமில் தற்போது கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பலப்படுத்தப்படுகிறது.

    இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் தலைமை இயக்குனர் சஞ்சய்குமார் கூறியிருப்பதாவது:-

    சைபர் கிரைமில் நெட்வொர்க் கட்டமைப்பை மேம்படுத்தவும், சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள் மற்றும் மாநிலத்துக்கு தேவையான அதிநவீன மென்பொருள் கருவிகளை வாங்க ரூ.28.97 கோடியை அரசு அனுமதித்துள்ளது.

    இதில் அதிவேக தடயவியல் இமேஜிங் சாதனம், ஆல் இன் ஒன் போர்ட்டபிள் ரைட் பிளாக்கர், போர்ட்டபிள் டேட்டா பிரித்தெடுக்கும் அமைப்பு, தடயவியல் மென்பொருள், டிஜிட்டல் தடயவியல் மென்பொருள் மற்றும் சாதன தரவு பிரித்தெடுத்தல் மென்பொருள் ஆகியவை அடங்கும்.

    இந்தக் கருவிகள் ஐ.பி. முகவரி அல்லது அரசு அல்லது தனிநபருக்கு எதிரான எந்தவொரு தவறான சமூக ஊடகங்களிலும் அல்லது சந்தேகத்திற்குரிய நபரின் ஆப் செய்யப்பட்ட செல்போனிலும் பயன்படுத்தப்படலாம்.

    இது சம்பந்தமாக 16 கருவிகள் வாங்கப்படுகிறது. மேலும் சைபர் குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடிக்க அனைத்து சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களுக்கும் குறைந்தது 3 கருவிகள் வாங்கப்படுகிறது.

    சைபர் கிரைம் போலீசார் பல முறை உதவிக்காக தனியார் தரப்பினரையோ அல்லது பிற மாநிலங்களையோ அணுக வேண்டியிருந்தது. சந்தேகத்திற்குரிய நபரை சமூக ஊடகங்களில் பதிவு செய்ய தனியார் ஏஜென்சிகள் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரை கேட்கின்றனர் என்றார்.

    மேலும் சைபர் கிரைம் பிரிவின் தொழில்நுட்ப ஆலோசகர் எம்.எஸ்.குமார் கூறியதாவது:-

    சைபர் குற்றங்களை கண்டறிய இந்த நவீன கருவிகள் பயன்படுத்தப்படும். உதாரணமாக, குற்றம் நடந்த இடத்திலிருந்து ஒரு சாதனத்தை மீட்டெடுத்தால், செல்போன் தடயவியல் கருவி சேமிப்பகத்திலும் வாட்ஸ்அப் அரட்டையிலும் உள்ளதைக் கண்டறிய மொபைல் சாதனத்திற்குள் செல்ல உதவும்.

    நாங்கள் முழு தகவலையும் பெறலாம் மற்றவர்களுக்கு அனுப்பியிருந்த தகவல்களையும் ஏற்கனவே அனுப்பியிருந்த தகவல்களை அழித்திருந்தாலும் நாங்கள் அதனை இந்த கருவிகள் மூலம் மீட்டெடுக்க முடியும்.

    குற்றவாளியை முடிவு செய்வதற்கு முன்பு நாங்கள் தொழில்நுட்ப ரீதியாக கண்டறிந்து அவர்கள் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும்.

    இப்போது 15 பேர் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றனர். நடவடிக்கை எடுக்க ஒரு குழுவும், பின்தொடர்வதற்காக மற்றொரு குழுவும் உள்ளது.

    ஒரு நாளைக்கு எத்தனை அழைப்புகள் பெறப்பட்டன மற்றும் கையாளப்பட்டன என்பது குறித்த அறிக்கையை உருவாக்க ஒரு குழு இருக்கும்.

    கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 80,148 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் ரூ.30.91 கோடி மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.158.03 கோடி வரை முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×