search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா: 100 ஆடுகள் பலியிட்டு விடிய விடிய கறி விருந்து
    X

    கறி விருந்தில் பங்கேற்றவர்களை காணலாம்.

    ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா: 100 ஆடுகள் பலியிட்டு விடிய விடிய கறி விருந்து

    • ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
    • அன்னதானத்தில் அய்யம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி ஆற்றின் கரையோரம் 1000 ஆண்டுகள் பழமையான சடையாண்டி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அய்யம்பாளையம் பெரியமுத்தாலம்மன் கோவிலில் இருந்து சுவாமி பெட்டி மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சடையாண்டி கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. அதன் பின் சுவாமி பெட்டிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதனைத் தொடர்ந்து சடையாண்டி கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 100க்கும் மேற்பட்டஆடுகள் பலியிடப்பட்டு அசைவ விருந்து தயாரிக்கப்பட்டது. நள்ளிரவில் சடையாண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு விழாவில் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நள்ளிரவில் தொடங்கிய இந்த அன்னதானம் விடிய விடிய நடந்தது.

    இந்த அன்னதானத்தில் அய்யம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இந்த வினோத திருவிழாவை காண சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

    Next Story
    ×