search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை, மங்களூரு சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு- கோவையில் 200 பேர் தீவிர கண்காணிப்பு
    X

    கோவை, மங்களூரு சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு- கோவையில் 200 பேர் தீவிர கண்காணிப்பு

    • கோவை கார் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அந்த அமைப்பின் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதள பக்கங்களையும் உன்னிப்பாக கண்காணிக்கிறோம்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி அதிகாலையில் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

    இதில் காரில் இருந்த ஜமேஷாபின் என்பவன் இறந்தான். போலீசாரின் விசாரணையில் ஜமேஷா முபின் பயங்கராவதி என்பதும், கோவையில் பல இடங்களில் நாசவேலையை அரங்கேற்ற திட்டமிட்ட அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.

    இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 11 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் காவலில் எடுத்தும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று விசாரித்ததுடன், அங்கிருந்து சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

    இந்த சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே கர்நாடகாவிலும் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஷாரிக் என்ற பயங்கரவாதி காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறான்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

    கோவை கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபினும், ஷாரிக்கும் கோவையில் சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது. மேலும் ஷாரிக் தென்னிந்தியாவில் பயங்கரவாத அமைப்பை உருவாக்கி நாச வேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

    இதுதவிர மத்திய மற்றும் தெற்காசியாவில் இருந்து டார்க்நெட் இணையதளம் மூலம் பணம் அனுப்பியதும் கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து இந்த 2 சம்பவங்கள் குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை கார் குண்டு வெடிப்பு மற்றும் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    இது தொடர்பாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான இதழ் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கோவையில் நடந்த குண்டு வெடிப்பு, நவம்பர் 19-ந் தேதி மங்களூரு குக்கர் குண்டு வெடிப்புகளுக்கு தங்கள் அமைப்பு பொறுப்பு ஏற்பதாக கூறப்பட்டிருந்தது.

    மேலும் தமிழ்நாடு கோவை, கர்நாடகா மங்களூவில் எங்கள் சகோதரர்கள் எங்கள் மதத்தின் மரியாதைக்காக குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் குறிப்பிட்டிருந்தது.

    இந்த 2 சம்பவங்களுக்கும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றதை அடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை தற்போது தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் நம்பகத்தன்மை குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை கார் குண்டு வெடிப்பு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றதை அடுத்து, கோவையில் மாநகர போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாக கோவையில் யாராவது இருக்கின்றனரா? என்பது குறித்தும் கண்காணித்து வருகின்றனர்.

    இதற்காக சிறப்பு அதிகாரி தலைமையில் ஒரு குழுவை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    கோவை கார் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அந்த அமைப்பின் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது குறித்து விசாரிக்கிறோம். இது தொடர்பாக என்.ஐ.ஏ.வுடனும் தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறோம்.

    மேலும் கோவையில் ஐ.எஸ். இயக்கத்துடன் யாராவது தொடர்பில் உள்ளனரா என்பது குறித்து கண்காணிக்கிறோம்.

    தற்போது கோவையில் சந்தேகத்திற்கிடமாக உள்ள 200 பேர் பட்டியல் தயாரித்து, அவர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

    அவர்களின் செல்போன் அழைப்புகளும் பார்த்து வருகிறோம். அவர்கள் யார் யாருடன் பேசி உள்ளனர். அதில் யாராவது சந்தேகப்படும் படியாக உள்ளனரா என்பதை அறிய அவர்களின் அழைப்பு விவரங்கள் அனைத்தையும் சேகரித்து வருகிறோம்.

    இதுதவிர அவர்களின் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதள பக்கங்களையும் உன்னிப்பாக கண்காணிக்கிறோம். அதில் அவர்கள் ஏதாவது கருத்துக்கள் பதிவிட்டுள்ளனரா என்பதையும் ஆராய்ந்து வருகிறோம்.

    இந்த பணியில் மாநகர உளவு போலீசார், சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சிறப்பு அதிகாரியையும் நியமித்துள்ளோம். அவரது தலைமையில் இந்த குழுவினர் தங்கள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×