search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓடும் பஸ்சில் நெஞ்சு வலி ஏற்பட்டு கிளீனர் பலி
    X

    ஓடும் பஸ்சில் நெஞ்சு வலி ஏற்பட்டு கிளீனர் பலி

    • கன்னியாகுமரி-நெல்லை நான்கு வழிச்சாலையில் மினி பஸ்சில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.
    • கிருஷ்ணன் உடலை பணகுடி போலீசார் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பணகுடி:

    ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து சுமார் 35 அய்யப்ப பக்தர்கள் மினிபஸ் மூலமாக சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திருவனந்தபுரம் வழியாக ஊருக்கு திரும்பினர்.

    கன்னியாகுமரி-நெல்லை நான்கு வழிச்சாலையில் மினி பஸ்சில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது பணகுடி அருகே நான்கு வழிச்சாலையில் வந்தபோது, அதில் பயணம் செய்து கொண்டிருந்த கிளீனரான திருப்பதியை சேர்ந்த கிருஷ்ணா (வயது 52) என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    உடனடியாக பஸ்சில் பயணித்தவர்கள், கிருஷ்ணாவை மீட்டு பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து கிருஷ்ணன் உடலை பணகுடி போலீசார் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×