என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோபாலபுரத்தில் குத்துச்சண்டை பயிற்சி மைய கட்டிடம்- உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
    X

    கோபாலபுரத்தில் குத்துச்சண்டை பயிற்சி மைய கட்டிடம்- உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

    • 234 சட்டமன்றத் தொகுதிகளில், அரசு ஏற்கனவே 61 தொகுதிகளில் பல்வகையான விளையாட்டரங்கங்களை அமைத்துள்ளது.
    • சிறு விளையாட்டரங்கம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னையில் உலகத் தரம் வாய்ந்த மைதானங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதன் மூலம் சென்னையை உலக அளவிலான விளையாட்டு நகரமாக நிறுவி, உலகளாவிய போட்டிகளுக்கு சிறந்த இடமாகவும் விளையாட்டு வீரர்களுக்கு உயர் செயல்திறன் பயிற்சி மையமாகவும் உருவாக்க திட்டமிடப்பட்டது. அந்த கையில் கோபாலபுரத்தில் ரூ. 7.79 கோடி மதிப்பீட்டில் குத்துச்சண்டை பயிற்சி மையம் கட்டப்பட்டு வருகிறது.

    இப்பயிற்சி மையத்தின் கட்டிட பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தமிழ்நாட்டில் இருக்கும் 234 சட்டமன்றத் தொகுதிகளில், அரசு ஏற்கனவே 61 தொகுதிகளில் பல்வகையான விளையாட்டரங்கங்களை அமைத்துள்ளது. அவ்விளையாட்டரங்கில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, கபாடி மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலமான விளையாட்டுகள் உட்பட குறைந்த பட்சம் ஐந்து முக்கிய விளையாட்டுக்களுக்கான மைதான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றப் தொகுதிகளில் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் மீதமுள்ள சட்டமன்றத் தொகுதிகளில் அளவில் சிறு விளையாட்டரங்கம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கம் கட்டட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் ந. எழிலன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×