search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குட்டியுடன் குடியிருப்புக்குள் முகாமிட்டுள்ள கரடி: பொதுமக்கள் அச்சம்
    X

    குன்னூர் பகுதியில் சுற்றி திரியும் கரடியை காணலாம்

    குட்டியுடன் குடியிருப்புக்குள் முகாமிட்டுள்ள கரடி: பொதுமக்கள் அச்சம்

    • குன்னூர் பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவே பயந்து, வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சிறுத்தை, காட்டெருமை, காட்டு யானை, காட்டுப்பன்றி மற்றும் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் கிராமம் மற்றும் நகரப்பகுதிகளில் நடமாடி வருகிறது.

    குறிப்பாக கரடிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வரும் கரடிகள், வீடுகளுக்குள் புகுந்து, அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கி வருகிறது. கரடிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சதில் உள்ளனர்.

    மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவே பயந்து, வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    குன்னூர் பகுதியில் உள்ள கன்னி மாரியம்மன் கோவில் தெரு என்ற இடத்தில் கரடி ஒன்று கடந்த சில தினங்களாகவே சுற்றி திரிந்தது.

    கரடி வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே நின்றதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் உள்ள சி.சி.டிவி காட்சிகளை பார்த்தனர்.

    அப்போது, கரடி குட்டி போட்டு இருப்பதாலும், குட்டி அங்கேயே விட்டு சென்றதாலும் அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்தது தெரியவந்தது.

    தொடர்ந்து கரடி அங்கேயே முகாமிட்டு இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். கரடி நடமாட்டம் இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் கேட்டுகொண்டனர்.

    Next Story
    ×