search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டுப்பாளையம் அருகே வனத்திற்குள் இறந்து கிடந்த குட்டி யானை- வனத்துறையினர் விசாரணை
    X

    மேட்டுப்பாளையம் அருகே வனத்திற்குள் இறந்து கிடந்த குட்டி யானை- வனத்துறையினர் விசாரணை

    • வனசரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து யானையை பார்வையிட்டனர்.
    • இறந்து கிடந்த குட்டி யானை பிறந்து 6 மாதமே ஆன ஆண் குட்டி யானை என்பது தெரியவந்தது.

    சிறுமுகை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடந்துறை காப்புக்காடு பகுதி உள்ளது.

    இந்த வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனவிலங்குகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைவது வழக்கம்.

    இந்த நிலையில் சிறுமுகை வனப்பணியாளர்கள் நேற்று ஒடந்துறை காப்புக்காடு வனத்திற்குள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்பொழுது வேடர் காலனி, ஏராக்குறை சரக வனப்பகுதி அருகே குட்டி யானை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. உடனடியாக சம்பவம் குறித்து, சிறுமுகை வனசரகர் செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து வனசரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து யானையை பார்வையிட்டனர்.

    அப்போது இறந்து கிடந்த குட்டி யானை பிறந்து 6 மாதமே ஆன ஆண் குட்டி யானை என்பது தெரியவந்தது. ஆனால் யானை இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இன்று காலை வனசரகர் செந்தில்குமார் தலைமையில் கால்நடை டாக்டர்கள் வனத்திற்கு வந்து, இறந்த குட்டி யானையின் உடலை உடற்கூராய்வு செய்கின்றனர்.

    உடற்கூராய்வுக்கு பின்னரே யானைக்குட்டி இறப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×