search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணா பிறந்த நாளையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து கைதிகள் 8 பேர் இன்று விடுதலை
    X

    அண்ணா பிறந்த நாளையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து கைதிகள் 8 பேர் இன்று விடுதலை

    • 10 ஆண்டு சிறைவாசம் முடித்தவர்கள், குறிப்பாக சிறைவாசியின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்க வேண்டும்.
    • வேலூர் மத்திய ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் 47 கைதிகளை விடுதலை செய்ய பரிந்துரை குழு முடிவு செய்துள்ளது.

    வேலூர்:

    அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்டகாலம் ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து, முன்விடுதலை செய்ய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    10 ஆண்டு சிறைவாசம் முடித்தவர்கள், குறிப்பாக சிறைவாசியின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல், முறைகேடு, வழிப்பறி, மோசடி, பயங்கரவாத குற்றங்கள், மாநிலத்துக்கு எதிரான குற்றம், சிறையில் இருந்து தப்பித்தல், கள்ள நோட்டு தயாரித்தல், பெண்களுக்கு எதிரான குற்றம், வரதட்சணை மரணம், பொருளாதார குற்றங்கள், கள்ளச்சந்தை, கடத்தல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், விஷம் கலந்த பொருட்களை விற்பனை செய்தல், வனம் குறித்த தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், ஒருவருக்கு மேற்பட்டவர்களை கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்றவர்கள், சாதி மற்றும் மத ரீதியான வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு முன்விடுதலை அளிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

    முன்விடுதலை அளிக்கப்படுவதை, மாநில அளவில் டிஜிபி அல்லது சிறைத்துறை தலைவர், சிறைத்துறை தலைமையிடத்து டிஐஜி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    மேலும் குழுவினர் மாவட்ட அளவில் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு, மண்டல அளவில், மண்டல சிறைத்துறை டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து பட்டியலை மாநில அளவிலான குழுவுக்கு அனுப்பி வைத்தனர்.

    அதன்படி வேலூர் மத்திய ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் 47 கைதிகளை விடுதலை செய்ய பரிந்துரை குழு முடிவு செய்துள்ளது.

    வேலூர் ஜெயிலில் இருந்து முதல் கட்டமாக 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

    இன்று 2-வது கட்டமாக 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் 7 பேர் 10 ஆண்டு சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனை கைதிகள். இவர்கள் அண்ணா பிறந்தநாளையொட்டி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தவிர ஒருவர் 75 வது சுதந்திர தினத்தையொட்டி தண்டனை குறைப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×