என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
அமைந்தகரையில் ஏகாம்பரேசுவரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்பிலான சொத்து மீட்பு
BySuresh K Jangir23 Oct 2022 7:23 AM GMT
- அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கட்டிடம், செனாய் நகர், புல்லா தெருவில் 7500 சதுர அடி உள்ளது.
- தரை தளத்தில் உள்ள மேலும் 6 கடைகளுக்கு வழக்கு நிலுவையில் உள்ளது.
சென்னை:
சென்னை, அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கட்டிடம், செனாய் நகர், புல்லா தெருவில் 7500 சதுர அடி உள்ளது. இது தனியார் ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.
இவர் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமலும், உள்வாடகைக்கு விட்டிருந்ததாலும் இந்து சமய அறநிலையத்துறை சென்னை இணை ஆணையர் உத்தரவின்படி, வருவாய்துறை மற்றும் போலீசார் உதவியுடன் அக்கட்டிடத்தின் முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தரை தளத்தில் உள்ள மேலும் 6 கடைகளுக்கு வழக்கு நிலுவையில் உள்ளது. விரைவில் அதனையும் தீர்ப்பின்படி மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.8 கோடி ஆகும்.
இந்த நடவடிக்கையின்போது சென்னை மண்டல உதவி ஆணையர் எம்.பாஸ்கரன், வட்டாட்சியர் காளியப்பன் மற்றும் கோவில் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X