search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜனதா பிரமுகர் கொலை- கவுன்சிலர் உள்பட 9 பேர் சென்னை கோர்ட்டில் சரண்
    X

    பா.ஜனதா பிரமுகர் கொலை- கவுன்சிலர் உள்பட 9 பேர் சென்னை கோர்ட்டில் சரண்

    • பி.பி.ஜி.சங்கர் நேற்று இரவு நசரத்பேட்டை சிக்னல் அருகே வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.
    • கொலை தொடர்பாக சென்னை எழும்பூர் 13-வது கோர்ட்டில் இன்று மதியம் 9 பேர் சரண் அடைந்தனர்.

    சென்னை:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும் பா.ஜனதா எஸ்.சி.எஸ்.டி பிரிவு மாநில பொருளாளருமான பி.பி.ஜி.சங்கர் நேற்று இரவு நசரத்பேட்டை சிக்னல் அருகே வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக சென்னை எழும்பூர் 13-வது கோர்ட்டில் இன்று மதியம் 9 பேர் சரண் அடைந்தனர். அவர்களில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரும் இருப்பதாக கூறப்படுகிறது. சரண் அடைந்த 9 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இதற்கிடையே சங்கரின் உடல் வைக்கப்பட்டுள்ள கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பா.ஜனதா கட்சியினரும், அவரது ஆதரவாளர்களும் இன்று மதியம் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.

    Next Story
    ×