என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
7 மணி நேரம் அதிரடி சோதனை: சார்பதிவாளர் அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது
- லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு விதிகளை மீறி பத்திரப்பதிவு நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது.
இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. ஹெக்டேர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமா, ஜான் பெஞ்சமின் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அலுவலகத்துக்குள் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சார்பதிவாளர் பொறுப்பு ஆண்ட்ரோ மெஸ் மாலின் மற்றும் ஊழியர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது கணக்கில் வராத பணம் இருந்தது தெரியவந்தது. சார்பதிவாளர் அலுவலரின் மோட்டார் சைக்கிளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டபோது கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு லட்சத்து 21 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மாலை 4.40 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 11.50 மணி வரை நடந்தது.
சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பணம் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது போன்ற விவரங்களும் கிடைத்துள்ளது. அவற்றின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக சார்பதிவாளர் பொறுப்பு ஆன்றோ மெஸ் மாலின் கேமரா ஆபரேட்டர் ரெஜினா, இளநிலை உதவியாளர் ரேஷ்மா உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் கல்குளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த சோதனையில் பெண் துணை தாசில்தார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கி கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மீண்டும் சார்பதிவாளர் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்