search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுகாதார ஊக்குவிப்பாளர்கள் 7 பேருக்கு டெல்லி குடியரசு தினவிழாவில் கவுரவம்
    X

    சுகாதார ஊக்குவிப்பாளர்கள் 7 பேருக்கு டெல்லி குடியரசு தினவிழாவில் கவுரவம்

    • பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பாக பணியாற்றிய சுகாதார ஊக்குவிப்பாளர்களை கவுரவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
    • சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு இன்று புறப்பட்டு செல்கின்றனர்.

    திண்டுக்கல்:

    நாட்டின் 75-வது குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பாக பணியாற்றிய சுகாதார ஊக்குவிப்பாளர்களை கவுரவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஊராட்சிகளில் திடக்கழிவு, திரவக்கழிவு மேலாண்மை செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட சுகாதார ஊக்குவிப்பாளர்களுக்கு டெல்லி குடியரசு தினவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தமிழகத்தில் திண்டுக்கல், திருநெல்வேலி, பெரம்பலூர், வேலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து மொத்தம் 7 ஊக்குவிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் பலக்கனூத்து ஊராட்சியை சேர்நத நாச்சம்மாள், காளாஞ்சிபட்டியை சேர்ந்த கற்பகம், நெல்லை மாவட்டம் கீழகோட்டத்தை சேர்ந்த சுமதி, வேலூர் மாவட்டம் மெட்டுகுளத்தை சேர்ந்த புஷ்பா, செங்கல்பட்டு மாவட்டம் புத்தூரை சேர்ந்த சத்யா, பெரம்பலூர் மாவட்டம் புதுநடுவனூரை சேர்ந்த சுதா, ஆலம்பாடியை சேர்ந்த புஷ்பலதா ஆகியோர் டெல்லி குடியரசு தினவிழாவில் பங்கேற்கின்றனர்.

    முழுசுகாதார இயக்கத்தின் மாநில தொடர்பு அலுவலர் ஏகாம்பரம், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஆகியோருடன் சுகாதார ஊக்குவிப்பாளர்கள் 7 பேர் என மொத்தம் 10 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு இன்று புறப்பட்டு செல்கின்றனர். குடியரசு தினவிழாவை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுகாதார ஊக்குவிப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.

    இந்த கூட்டத்தில் திடக்கழிவு, திரவக்கழிவு, மேலாண்மை செயல்பாடு, நீடிக்கும் சவால்கள், அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×