என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொழிலாளர்களை கலங்கடித்த 5 அடி நீள நல்ல பாம்பு
    X

    தொழிலாளர்களை கலங்கடித்த 5 அடி நீள நல்ல பாம்பு

    • மஞ்சள் மூட்டையை தொழிலாளர்கள் அகற்றியபோது அதில் பதுங்கி இருந்த சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சீறியது.
    • பாம்பை லாவகமாக பிடிக்கும் பஞ்செட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த அழிஞ்சிவாக்கம் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அருகே தனியார் மஞ்சள் தூள் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் அங்கிருந்த மஞ்சள் மூட்டையை தொழிலாளர்கள் அகற்றியபோது அதில் பதுங்கி இருந்த சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சீறியது. அதனை அங்கிருந்த ஊழியர்கள் விரட்ட முயன்றனர்.

    ஆனால் நல்ல பாம்பு படம் எடுத்து மிரட்டியது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து பாம்பை லாவகமாக பிடிக்கும் பஞ்செட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பாம்பை பிடிக்க முயன்றபோது அங்கிருந்த மஞ்சள் மூட்டைகளுக்குள் புகுந்து போக்கு காட்டியது. சுமார் 3 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் நல்ல பாம்பு சிக்கியது. இதன்பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பிடிபட்ட நல்ல பாம்பு பின்னர் வனப்பகுதியில் விடப்பட்டது.

    Next Story
    ×