என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
இஸ்ரேலில் இருந்து மேலும் 23 தமிழர்கள் தமிழகம் வந்தடைந்தனர்: இதுவரை 147 பேர் மீட்பு
- மத்திய அரசு ஆபரேஷன் அஜய் திட்டத்தை கடந்த புதன்கிழமை தொடங்கியது.
- இஸ்ரேலில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 147 பேர் இதுவரை வந்துள்ளனர்.
சென்னை:
இஸ்ரேல் நாட்டுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் ஏற்பட்ட போர் காரணமாக இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பலர் நாடு திரும்பி வருகின்றனர்.
இந்தியாவுக்கு வர விருப்பம் தெரிவித்தவர்களை அழைத்து வர மத்திய அரசு 'ஆபரேஷன் அஜய்' திட்டத்தை கடந்த புதன்கிழமை தொடங்கியது.
அதன்படி, ஏர் இந்தியா விமானம் மூலம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் இருந்து 212 இந்தியர்கள் முதல்கட்டமாக நாடு திரும்பினார்கள். 2-வது கட்டமாக 235 பேரும், 3-வது கட்டமாக 197 பேரும், 4-வது கட்டமாக 274 பேரும் டெல்லி வந்தனர். இப்போது 5-வது கட்டமாக 286 பேர் டெல்லி வந்தனர்.
இந்நிலையில், இஸ்ரேலில் இருந்து 5 கட்டமாக டெல்லி வந்த விமானங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 147 பேர் இதுவரை வந்துள்ளனர். அவர்களை தமிழக அதிகாரிகள் வரவேற்று அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
இன்று அதிகாலை வந்த விமானத்தில் 23 தமிழர்கள் வந்திருந்தனர். இதில் 17 பேர் சென்னைக்கும், 4 பேர் கோவைக்கும், 2 பேர் மதுரைக்கும் விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுபற்றி தமிழக அதிகாரிகள் கூறுகையில், இஸ்ரேலில் இருந்து இதுவரை 121 தமிழர்கள் அரசு சார்பிலும் 26 பேர் சொந்த செலவிலும் தமிழகம் வந்துள்ளனர். மொத்தம் 147 பேர் வந்துள்ள நிலையில் இன்னும் 11 பேர் இஸ்ரேலில் உள்ளனர். அவர்கள் வெவ்வேறு நகரங்களில் பாதுகாப்பாக இருப்பதாகவும், இப்போது தமிழகம் வர விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஆனாலும் நாங்கள் தினமும் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். அவர்கள் வர விரும்பினால் அழைத்து வருவதற்கும் அரசு தயாராக உள்ளது என தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்