search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சபாநாயகர் அப்பாவு
    X
    சபாநாயகர் அப்பாவு

    கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கூடாது- சபாநாயகர் அப்பாவு

    மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியாக கூடங்குளம் உள்ளதால் அங்கு அணுக்கழிவு மையம் அமைக்க கூடாது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூட ங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே பாரத பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் அணுக்கழிவுகளை இங்கு வைக்கக்கூடாது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இந்த ஒப்பந்தம் மாற்றம் செய்யப்பட்டது.

    மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியாக கூடங்குளம் உள்ளதால் அங்கு அணுக்கழிவு மையம் அமைக்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×