search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆரணி அருகே 11-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: பலாத்கார வீடியோவை காட்டி மேலும் 3 பேர் கற்பழித்தனர்

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 11-ம் வகுப்பு மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆரணி:

    ஆரணி பகுதி பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார்.

    அவரை மீட்டு பெற்றோர் தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாணவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து 1098 உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியை திருவண்ணாமலை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வாலிபர் ஒருவர் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    அந்த வாலிபர் மாணவியுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வீடியோவை தனது நண்பர்களிடம் காட்டியுள்ளார்.

    இதையடுத்து அவரது நண்பர்கள் 3 பேர் அந்த மாணவியிடம் வீடியோவை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×