என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    சங்கராபுரம் அருகே கார் டயர் வெடித்து சப்-கலெக்டர், சிறுமி பலி

    விபத்தில் பலியான சப்-கலெக்டர் ராஜாமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சங்கராபுரம்:

    திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கீழ்பாவதுகுடியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 50). இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட சப்-கலெக்டராக பணியாற்றி வந்தார்.

    இன்று காலை கோவிலுக்கு செல்வதற்காக தனது கணவர் சுந்தரம் (55), மகள் சிந்து (24), மகன் விக்ரம் (21), உறவினர் பழனியம்மாள் (55) ஆகியோருடன் ஒரு காரில் சங்கராபுரம் நோக்கி சென்றார். காரை கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாருக் (35) என்பவர் ஓட்டி சென்றார்.

    இந்த கார் சங்கராபுரம் அருகே மயிலாம்பாறை பகுதியில் சென்றபோது, திடீரென டயர் வெடித்து சிதறியது. இதில் நிலை தடுமாறிய கார் சாலையோரம் சென்ற ஒரு மோட்டார் சைக்கிளில் மோதியது. பின்னர் வீட்டு வாசலில் நின்றிருந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் கோபிகா (11) என்ற சிறுமி மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சப்-கலெக்டர் ராஜாமணி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

    அவருடன் வந்த கணவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கார் மோதியதில் காயமடைந்த சிறுமி கோபிகாவும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். பின்னர் காயமடைந்த அனைவரும் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி கோபிகாவும் உயிரிழந்தார்.

    விபத்தில் பலியான சப்- கலெக்டர் ராஜாமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×