என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    ராணிப்பேட்டையில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.50 லட்சம் நகை, பணம் கொள்ளை

    ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.50 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் எஸ்.எம்.சுகுமார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். எஸ்.எம்.சுகுமார் கடந்த சனிக்கிழமை உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் ராணிப்பேட்டையில் உள்ள அவரது வீடு பூட்டி கிடப்பதை கவனித்த திருட்டு கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.38 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா ரெக்கார்டர் உட்பட அனைத்தையும் திருட்டு கும்பல் கையோடு எடுத்து சென்றனர்.

    வீட்டில் சமையல் பணியாளர்கள் வந்து பார்த்த போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து எஸ்.எம்.சுகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் ராணிப்பேட்டை டி.எஸ்.பி. பிரபுவிடம் புகார் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தி திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.

    இது தொடர்பாக தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த பகுதி ரோட்டில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    Next Story
    ×