search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோப்பு படம
    X
    கோப்பு படம

    புதுவையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்- 11 நாட்களில் ரூ.13.38 லட்சம் வசூல்

    புதுவையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து 11 நாட்களில் ரூ.13.38 லட்சம் வசூலானது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    சினிமா தியேட்டர், வணிக வளாகம், திருமண மண்டபங்களில் 50 சதவீதத்தினரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். முக கவசம் அணிவது  கட்டாயம் என விதிகள் அமலாகியுள்ளது. 

    முக கவசம் அணியாத வர்களிடம் போலீசார் ரூ.100 அபராதம் வசூலித்து வருகின்றனர். கொரோனா  கட்டுப்பாடுகளை மீறுவேர் மீது வழக்கும் பதியப்படுகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 11 நாளில் ரூ.13.38 லட்சம் முக கவசம்  அணியாதவர்களிடம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×