என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கைது
கேளம்பாக்கத்தில் பெண் படுகொலை- உல்லாசமாக இருந்துவிட்டு தீர்த்து கட்டிய வாலிபர் நண்பர்களுடன் கைது
தனியாக வசித்து வந்த 2 குழந்தைகளின் தாயுடன் நெருங்கிய பழகிய வாலிபரே நண்பர்களோடு சேர்ந்து அவரை கொலை செய்த சம்பவம் கேளம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்போரூர்:
சென்னை அடுத்துள்ள கேளம்பாக்கம் காமராஜர் தெருவில் வசித்து வந்தவர் ஷாஇன்ஷா. 26 வயதான இவருக்கும் வரதராஜ் என்பவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கணவர் வரதராஜ் மரணம் அடைந்ததையடுத்து மகன்களுடன் ஷாஇன்ஷா தனியாக வசித்து வந்தார். அவரது தாய் மகளுடன் ஒன்றாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி ஷாஇன்ஷாவின் குழந்தைகள் இருவரும் பாட்டியுடன் வெளியில் சென்று விட்டனர். அப்போது ஷாஇன்ஷா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்த நேரத்தில் அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பினர்.
மாலையில் தாய் வீடு திரும்பியபோதுதான் இந்த கொலை சம்பவம் வெளியில் தெரிந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் வண்டலூர் உதவி கமிஷனர் சிங்கார வேலு, கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ஷாஇன்ஷா கழுத்தை நெரித்து, கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
2 குழந்தைகளின் தாயான பெண் பட்டப்பகலில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த கொலை சம்பவத்தைப் பார்த்து போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கொலையாளிகள் யார் என்பது உறுதியாக தெரியாத நிலையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக துப்பு துலக்கப்பட்டது.
இதில் ஷாஇன்ஷா கொலை வழக்கில் 3 பேர் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.
இந்த கொலை வழக்கில் கொட்டிவாக்கம் இளங்கோ நகர், தெற்கு காந்தி தெருவைச் சேர்ந்த கார்த்தி மற்றும் அவரது நண்பர்களான கோட்டூர்புரம், சித்ரா நகரைச் சேர்ந்த சுரேஷ் என்ற சுக்குகாபி, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். கொலை வழக்கில் கார்த்தி முக்கிய குற்றவாளி ஆவார்.
ஷாஇன்ஷாவை கொலை செய்தது ஏன் என்பது பற்றி போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஷாஇன்ஷா, கார்த்தியின் அண்ணன் விஜய்யுடன் பழகி உள்ளார். அவர் பழகிய சில மாதங்களில் விஜய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் மரணம் அடைந்த பிறகு இது தொடர்பாக ஷாஇன்ஷாவிடம் பலமுறை அண்ணன் எதற்காக தற்கொலை செய்தார் என்று கார்த்தி கேட்டு வந்துள்ளார். இதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து ஷாஇன்ஷாவுடன் நெருங்கி பழகி அவரை கொலை செய்ததாக கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
எனது அண்ணன் விஜய் ஷாஇன்ஷாவுடன் பழகிய பிறகு திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஷாஇன்ஷாவிடம் கேட்டபோது எனக்கு எதுவும் தெரியாது என்று கூறி வந்தார்.
இதையடுத்து அவருடன் நெருங்கி பழகி உண்மையை தெரிந்து கொள்ள நினைத்தேன். கடந்த 2-ந்தேதி ஷாஇன்ஷாவின் வீட்டுக்கு சென்று அதுபற்றி கேட்டேன்.
அதற்கு ஷாஇன்ஷா அதையெல்லாம் கேட்காதே. நீ வந்த வேலையை மட்டும் பார் என்று கூறினார். இதையடுத்து அவருடன் நான் உல்லாசமாக இருந்து விட்டு அதன் பிறகு மீண்டும் அண்ணன் விஜய் மரணம் பற்றி கேட்டேன்.
அப்போது ஆத்திரம் அடைந்த ஷாஇன்ஷா திரும்ப திரும்ப அதைபற்றி கேட்டால் உனது அண்ணன் நிலைதான் உனக்கும் ஏற்படும் என எச்சரித்தார்.
இதனால் எனக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது. ஷாஇன்ஷாவை கொலை செய்ய முடிவு செய்தேன். இதையடுத்து எனது நண்பர்களான ஆனந்த், சுரேஷ் இருவரையும் ஷாஇன்ஷாவின் வீட்டுக்கு வரவழைத்தேன். 3 பேரும் சேர்ந்து டவலால் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டோம்.
இவ்வாறு கார்த்தி தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கைதான 3 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
தனியாக வசித்து வந்த 2 குழந்தைகளின் தாயுடன் நெருங்கிய பழகிய வாலிபரே நண்பர்களோடு சேர்ந்து அவரை கொலை செய்த சம்பவம் கேளம்பாக்கத்தில் பரபரப்பான பேச்சாக மாறி இருக்கிறது.
சென்னை அடுத்துள்ள கேளம்பாக்கம் காமராஜர் தெருவில் வசித்து வந்தவர் ஷாஇன்ஷா. 26 வயதான இவருக்கும் வரதராஜ் என்பவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கணவர் வரதராஜ் மரணம் அடைந்ததையடுத்து மகன்களுடன் ஷாஇன்ஷா தனியாக வசித்து வந்தார். அவரது தாய் மகளுடன் ஒன்றாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி ஷாஇன்ஷாவின் குழந்தைகள் இருவரும் பாட்டியுடன் வெளியில் சென்று விட்டனர். அப்போது ஷாஇன்ஷா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்த நேரத்தில் அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பினர்.
மாலையில் தாய் வீடு திரும்பியபோதுதான் இந்த கொலை சம்பவம் வெளியில் தெரிந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் வண்டலூர் உதவி கமிஷனர் சிங்கார வேலு, கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ஷாஇன்ஷா கழுத்தை நெரித்து, கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
2 குழந்தைகளின் தாயான பெண் பட்டப்பகலில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த கொலை சம்பவத்தைப் பார்த்து போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கொலையாளிகள் யார் என்பது உறுதியாக தெரியாத நிலையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக துப்பு துலக்கப்பட்டது.
இதில் ஷாஇன்ஷா கொலை வழக்கில் 3 பேர் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.
இந்த கொலை வழக்கில் கொட்டிவாக்கம் இளங்கோ நகர், தெற்கு காந்தி தெருவைச் சேர்ந்த கார்த்தி மற்றும் அவரது நண்பர்களான கோட்டூர்புரம், சித்ரா நகரைச் சேர்ந்த சுரேஷ் என்ற சுக்குகாபி, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். கொலை வழக்கில் கார்த்தி முக்கிய குற்றவாளி ஆவார்.
ஷாஇன்ஷாவை கொலை செய்தது ஏன் என்பது பற்றி போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஷாஇன்ஷா, கார்த்தியின் அண்ணன் விஜய்யுடன் பழகி உள்ளார். அவர் பழகிய சில மாதங்களில் விஜய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் மரணம் அடைந்த பிறகு இது தொடர்பாக ஷாஇன்ஷாவிடம் பலமுறை அண்ணன் எதற்காக தற்கொலை செய்தார் என்று கார்த்தி கேட்டு வந்துள்ளார். இதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து ஷாஇன்ஷாவுடன் நெருங்கி பழகி அவரை கொலை செய்ததாக கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
எனது அண்ணன் விஜய் ஷாஇன்ஷாவுடன் பழகிய பிறகு திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஷாஇன்ஷாவிடம் கேட்டபோது எனக்கு எதுவும் தெரியாது என்று கூறி வந்தார்.
இதையடுத்து அவருடன் நெருங்கி பழகி உண்மையை தெரிந்து கொள்ள நினைத்தேன். கடந்த 2-ந்தேதி ஷாஇன்ஷாவின் வீட்டுக்கு சென்று அதுபற்றி கேட்டேன்.
அதற்கு ஷாஇன்ஷா அதையெல்லாம் கேட்காதே. நீ வந்த வேலையை மட்டும் பார் என்று கூறினார். இதையடுத்து அவருடன் நான் உல்லாசமாக இருந்து விட்டு அதன் பிறகு மீண்டும் அண்ணன் விஜய் மரணம் பற்றி கேட்டேன்.
அப்போது ஆத்திரம் அடைந்த ஷாஇன்ஷா திரும்ப திரும்ப அதைபற்றி கேட்டால் உனது அண்ணன் நிலைதான் உனக்கும் ஏற்படும் என எச்சரித்தார்.
இதனால் எனக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது. ஷாஇன்ஷாவை கொலை செய்ய முடிவு செய்தேன். இதையடுத்து எனது நண்பர்களான ஆனந்த், சுரேஷ் இருவரையும் ஷாஇன்ஷாவின் வீட்டுக்கு வரவழைத்தேன். 3 பேரும் சேர்ந்து டவலால் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டோம்.
இவ்வாறு கார்த்தி தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கைதான 3 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
தனியாக வசித்து வந்த 2 குழந்தைகளின் தாயுடன் நெருங்கிய பழகிய வாலிபரே நண்பர்களோடு சேர்ந்து அவரை கொலை செய்த சம்பவம் கேளம்பாக்கத்தில் பரபரப்பான பேச்சாக மாறி இருக்கிறது.
Next Story






