search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    அம்மையார்குப்பத்தில் ரூ.1½ லட்சம் ஐம்பொன் சிலை திருட்டு

    அம்மையார்குப்பத்தில் ரூ.1½ லட்சம் ஐம்பொன் சிலை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிப்பட்டு:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த அம்மையார்குப்பம் சாந்த மலை அடிவாரத்தில் வாரியார் சுவாமிகள் மடம் உள்ளது. இந்த மடத்தில் ரூ.1½ லட்சம் மதிப்பிலான ஐம்பொன்னாலான வாரியார் சாமி சிலை இருந்தது.

    நேற்று காலை மடத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான வாரியார் சாமிகளின் ஐம்பொன்னால் ஆன சிலை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×