என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ.8 லட்சத்து 72 ஆயிரம் பறிமுதல்
Byமாலை மலர்3 April 2021 6:20 AM GMT (Updated: 3 April 2021 6:20 AM GMT)
திண்டுக்கல் அருகே காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.8 லட்சத்து 72 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செந்துறை:
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பரிசு பொருட்கள், பண பட்டுவாடா செய்யப்படுகிறதா? என சோதனை செய்து வருகின்றனர். மேலும் வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் உள்பட அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் அருகே செந்துறை பகுதியில் அதிகாரி சிதம்பரம் தலைமையிலான பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
மணக்காட்டூரிலிருந்து நத்தம் வழியாக வந்த காரை நிறுத்திச் சோதனையிட்டனர். அதில் 8 லட்சத்து 71 ஆயிரத்து 950 ரூபாய் இருந்தது. அதற்குரிய ஆவணங்கள் இல்லை. பணத்தை கொண்டு வந்த திண்டுக்கல்லை சேர்ந்த பாஸ்கரனிடம் விசாரித்தபோது, அவர், தனியார் பைனான்ஸ் கம்பெனிக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடமில்லை. அப்பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், நத்தம் தேர்தல் அதிகாரி திருமலை மற்றும் உதவி தேர்தல் அதிகாரி விஜயலெட்சுமி ஆகியோ ரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் நத்தம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பரிசு பொருட்கள், பண பட்டுவாடா செய்யப்படுகிறதா? என சோதனை செய்து வருகின்றனர். மேலும் வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் உள்பட அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் அருகே செந்துறை பகுதியில் அதிகாரி சிதம்பரம் தலைமையிலான பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
மணக்காட்டூரிலிருந்து நத்தம் வழியாக வந்த காரை நிறுத்திச் சோதனையிட்டனர். அதில் 8 லட்சத்து 71 ஆயிரத்து 950 ரூபாய் இருந்தது. அதற்குரிய ஆவணங்கள் இல்லை. பணத்தை கொண்டு வந்த திண்டுக்கல்லை சேர்ந்த பாஸ்கரனிடம் விசாரித்தபோது, அவர், தனியார் பைனான்ஸ் கம்பெனிக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடமில்லை. அப்பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், நத்தம் தேர்தல் அதிகாரி திருமலை மற்றும் உதவி தேர்தல் அதிகாரி விஜயலெட்சுமி ஆகியோ ரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் நத்தம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X