search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    புரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

    புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    காரைக்கால்:

    காரைக்காலில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    புரெவி புயல் காரணமாக காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது. இதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் அர்ஜூன் தர்மா அறிவித்துள்ளார்.

    புதுச்சேரி மாநில பகுதியான காரைக்கால் தமிழகத்தின் நாகை மாவட்டத்திற்கு அருகில் உள்ளது. காரைக்கால் பகுதியில் புரெவி புயல் காரணமாக நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
    Next Story
    ×