என் மலர்
செய்திகள்

கொரோனா அரக்கி ஓவியம்
புதுவை மக்களை கவர்ந்த கொரோனா அரக்கி
கொரோனா விழிப்புணர்வு கண்காட்சிக்கு வரும் மக்களை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள பேனரில் இடம் பெற்றுள்ள கொரோனா அரக்கி ஓவியம் மக்களை கவர்ந்துள்ளது.
புதுவை:
புதுவையில் கொரோனா பரவல் கடந்த ஒரு மாத காலமாக வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மக்களிடம் கொரோனா குறித்த அச்சம் குறைந்துள்ளது. பண்டிகை காலமான இப்போது பிரதான சாலைகளிலும், கடைகளிலும் மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.
இதனால் புதுவை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக புதுவை கடற்கரை சாலையில் கொரோனா விழிப்புணர்வு கண்காட்சி நடக்கிறது. இதில், முகக்கவசம், கிருமிநாசினி, சமூக இடைவெளி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஒவியங்கள் இடம் பெற்றுள்ளது. கண்காட்சிக்கு வரும் மக்களை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள பேனரில் இடம் பெற்றுள்ள கொரோனா அரக்கி ஓவியம் மக்களை கவர்ந்துள்ளது.
புதுவையில் கொரோனா பரவல் கடந்த ஒரு மாத காலமாக வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மக்களிடம் கொரோனா குறித்த அச்சம் குறைந்துள்ளது. பண்டிகை காலமான இப்போது பிரதான சாலைகளிலும், கடைகளிலும் மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.
இதனால் புதுவை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக புதுவை கடற்கரை சாலையில் கொரோனா விழிப்புணர்வு கண்காட்சி நடக்கிறது. இதில், முகக்கவசம், கிருமிநாசினி, சமூக இடைவெளி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஒவியங்கள் இடம் பெற்றுள்ளது. கண்காட்சிக்கு வரும் மக்களை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள பேனரில் இடம் பெற்றுள்ள கொரோனா அரக்கி ஓவியம் மக்களை கவர்ந்துள்ளது.
Next Story






