என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணத்தை வீட்டிலிருந்து பேஸ்புக், யூடியூப்பில் பாருங்கள்- என்ஜினீயரின் வித்தியாசமான அழைப்பிதழ்
Byமாலை மலர்22 April 2020 10:49 AM GMT (Updated: 22 April 2020 10:49 AM GMT)
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தினால் தனது திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்ட என்ஜினீயர் அதற்கான திருமண பத்திரிகை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
கோவை:
கோவை துடியலூர் அருகேயுள்ள குருடம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் பாபு. என்ஜினீயரான விக்னேஷ் பாவுக்கும், பிரவீனா என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அப்போது வருகிற 26-ந்தேதி திருமணத்தை நடத்த அவர்களது பெற்றோர் முடிவு செய்து இருந்தனர். ஆனால் ஊரடங்கு அமலில் உள்ளதால் திருமணத்தை உறவினர்கள் அனைவரையும் அழைத்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தனது திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்ட என்ஜினீயர் விக்னேஷ் பாபு அதற்கான திருமண பத்திரிகை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் ‘ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தினால் எளிய முறையில் வீட்டிலேயே திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு முடிந்து நிலைமை சீர் அடைந்த பிறகு வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைக்கின்றோம். மேலும் வீட்டில் வைத்து நடக்கும் எங்களது திருமணத்தை நேரடியாக பேஸ்புக் மற்றும் யூடியூப்பில் ஒளிபரப்ப உள்ளேன். அதில் பார்த்து தாங்கள் மணமக்களை ஆசீர்வதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
கோவை துடியலூர் அருகேயுள்ள குருடம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் பாபு. என்ஜினீயரான விக்னேஷ் பாவுக்கும், பிரவீனா என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அப்போது வருகிற 26-ந்தேதி திருமணத்தை நடத்த அவர்களது பெற்றோர் முடிவு செய்து இருந்தனர். ஆனால் ஊரடங்கு அமலில் உள்ளதால் திருமணத்தை உறவினர்கள் அனைவரையும் அழைத்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தனது திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்ட என்ஜினீயர் விக்னேஷ் பாபு அதற்கான திருமண பத்திரிகை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் ‘ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தினால் எளிய முறையில் வீட்டிலேயே திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு முடிந்து நிலைமை சீர் அடைந்த பிறகு வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைக்கின்றோம். மேலும் வீட்டில் வைத்து நடக்கும் எங்களது திருமணத்தை நேரடியாக பேஸ்புக் மற்றும் யூடியூப்பில் ஒளிபரப்ப உள்ளேன். அதில் பார்த்து தாங்கள் மணமக்களை ஆசீர்வதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X