என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காலாவதி தேதி பார்த்து பொருட்களை வாங்க வேண்டும் - கலெக்டர் ரத்னா அறிவுறுத்தல்
Byமாலை மலர்22 Feb 2020 3:45 PM GMT (Updated: 22 Feb 2020 3:45 PM GMT)
காலாவதி தேதி பார்த்து பொருட்களை வாங்க வேண்டும் என்று நுகர்வோருக்கு அரியலூர் கலெக்டர் ரத்னா அறிவுறுத்தி உள்ளார்.
அரியலூர்:
அரியலூரில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்தது. அப்போது அவர் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில், நுகர்வோர்கள் பொருட்களை வாங்கினால் மட்டும் போதாது, அது தயாரிக்கப்பட்ட நாள், காலாவதியாகும் நாள், அந்த பொருளின் தர முத்திரை ஆகியவற்றை பார்த்த பிறகே வாங்க வேண்டும். முக்கியமாக வாங்கும் பொருட்கள் அனைத்திற்கும் ரசீது கேட்டு பெறப்பட வேண்டும்.
பொதுமக்கள் தரம் அறிந்து பொருட்களை வாங்குவதுடன் போலிகளை வாங்கி ஏமாறாமல் இருக்கவேண்டும். விளம்பரங்களை கண்டு ஏமாறக் கூடாது. பரிசுப் பொருட்கள் மற்றும் இலவச இணைப்புக்காக தரமற்ற தேவையற்ற பொருட்களை வாங்கக்கூடாது. எனவே நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருந்து தேவைக்கு மட்டும் பொருட்களை வாங்கி பயன்படுத்தி நமது வீட்டையும் நமது நாட்டையும் காப்போம் என்று உறுதி கொள்வோம் என்றார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், கோட்டாட்சியர் பாலாஜி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு) டாக்டர் பிரவீன்குமார், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் பாஸ்கரன், நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத்தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட தலைவர் ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரியலூரில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்தது. அப்போது அவர் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில், நுகர்வோர்கள் பொருட்களை வாங்கினால் மட்டும் போதாது, அது தயாரிக்கப்பட்ட நாள், காலாவதியாகும் நாள், அந்த பொருளின் தர முத்திரை ஆகியவற்றை பார்த்த பிறகே வாங்க வேண்டும். முக்கியமாக வாங்கும் பொருட்கள் அனைத்திற்கும் ரசீது கேட்டு பெறப்பட வேண்டும்.
பொதுமக்கள் தரம் அறிந்து பொருட்களை வாங்குவதுடன் போலிகளை வாங்கி ஏமாறாமல் இருக்கவேண்டும். விளம்பரங்களை கண்டு ஏமாறக் கூடாது. பரிசுப் பொருட்கள் மற்றும் இலவச இணைப்புக்காக தரமற்ற தேவையற்ற பொருட்களை வாங்கக்கூடாது. எனவே நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருந்து தேவைக்கு மட்டும் பொருட்களை வாங்கி பயன்படுத்தி நமது வீட்டையும் நமது நாட்டையும் காப்போம் என்று உறுதி கொள்வோம் என்றார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், கோட்டாட்சியர் பாலாஜி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு) டாக்டர் பிரவீன்குமார், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் பாஸ்கரன், நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத்தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட தலைவர் ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X