என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10ம் வகுப்பு தேர்வு - புதுவை-காரைக்காலில் 97.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
Byமாலை மலர்29 April 2019 5:09 AM GMT (Updated: 29 April 2019 10:24 AM GMT)
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் புதுவை-காரைக்காலில் 97.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். #studentspassed #pudhucherryexamsresult #tenthexamsresult
புதுச்சேரி:
கடந்த மார்ச் மாதம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதுகுறித்து புதுவை அரசின் பள்ளி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுவை, காரைக்காலை சேர்ந்த 16 ஆயிரத்து 520 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 192 மாணவர்களும், 8 ஆயிரத்து 328 மாணவிகள் ஆவர்.
இன்று வெளியான தேர்வு முடிவுகளின்படி அரசு, தனியார் பள்ளிகளில் படித்த 16 ஆயிரத்து 119 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 7ஆயிரத்து 908 மாணவர்களும், 8 ஆயிரத்து 211 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் சென்ற ஆண்டைவிட 7 சதவீத தேர்ச்சி அதிகரித்துள்ளது. அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி 97.57 சதவீதமாகும்.
இது கடந்த ஆண்டைவிட 3.2 சதவீதம் அதிகம். அரசு பள்ளிகளை பொறுத்தவரை தேர்ச்சி சதவீதம் 94.85 சதவீதமாகும். இது கடந்த ஆண்டைவிட 6.79 சதவீதம் அதிகம். புதுவை, காரைக்காலில் 302 அரசு, தனியார் பள்ளிகள் உள்ளது. இதில் 100 சதவீத தேர்ச்சியை 190 பள்ளிகள் பெற்றுள்ளது. புதுவையில் 156 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. காரைக்காலில் 34 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
புதுவை, காரைக்காலில் 110 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் 43 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. புதுவையில் 35 அரசு பள்ளிகளும், காரைக்காலில் 8 அரசு பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் கணித பாடத்தில் 25 மாணவர்களும், அறிவியலில் 18 மாணவர்களும், சமூக அறிவியலில் 81 மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
450 முதல் 499 வரை ஆயிரத்து 252 மாணவர்களும், 400 முதல் 449 வரை 2 ஆயிரத்து 506 மாணவர்களும், 350 முதல் 399 வரை 3 ஆயிரத்து 36 மாணவர்களும் 300 முதல் 349 வரை 3 ஆயிரத்து 288 மாணவர்களும், 250 முதல் 299 வரை 3 ஆயிரத்து 117 மாணவர்களும், 200 முதல் 249 வரை 2 ஆயிரத்து 552 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #studentspassed #pudhucherryexamsresult #tenthexamsresult
கடந்த மார்ச் மாதம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதுகுறித்து புதுவை அரசின் பள்ளி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுவை, காரைக்காலை சேர்ந்த 16 ஆயிரத்து 520 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 192 மாணவர்களும், 8 ஆயிரத்து 328 மாணவிகள் ஆவர்.
இன்று வெளியான தேர்வு முடிவுகளின்படி அரசு, தனியார் பள்ளிகளில் படித்த 16 ஆயிரத்து 119 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 7ஆயிரத்து 908 மாணவர்களும், 8 ஆயிரத்து 211 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் சென்ற ஆண்டைவிட 7 சதவீத தேர்ச்சி அதிகரித்துள்ளது. அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி 97.57 சதவீதமாகும்.
இது கடந்த ஆண்டைவிட 3.2 சதவீதம் அதிகம். அரசு பள்ளிகளை பொறுத்தவரை தேர்ச்சி சதவீதம் 94.85 சதவீதமாகும். இது கடந்த ஆண்டைவிட 6.79 சதவீதம் அதிகம். புதுவை, காரைக்காலில் 302 அரசு, தனியார் பள்ளிகள் உள்ளது. இதில் 100 சதவீத தேர்ச்சியை 190 பள்ளிகள் பெற்றுள்ளது. புதுவையில் 156 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. காரைக்காலில் 34 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
புதுவை, காரைக்காலில் 110 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் 43 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. புதுவையில் 35 அரசு பள்ளிகளும், காரைக்காலில் 8 அரசு பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் கணித பாடத்தில் 25 மாணவர்களும், அறிவியலில் 18 மாணவர்களும், சமூக அறிவியலில் 81 மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
450 முதல் 499 வரை ஆயிரத்து 252 மாணவர்களும், 400 முதல் 449 வரை 2 ஆயிரத்து 506 மாணவர்களும், 350 முதல் 399 வரை 3 ஆயிரத்து 36 மாணவர்களும் 300 முதல் 349 வரை 3 ஆயிரத்து 288 மாணவர்களும், 250 முதல் 299 வரை 3 ஆயிரத்து 117 மாணவர்களும், 200 முதல் 249 வரை 2 ஆயிரத்து 552 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #studentspassed #pudhucherryexamsresult #tenthexamsresult
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X