என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டறம்பள்ளி அருகே கார் விபத்து- தர்மபுரி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி பலி
Byமாலை மலர்5 Jan 2019 6:09 AM GMT (Updated: 5 Jan 2019 6:09 AM GMT)
நாட்டறம்பள்ளி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தர்மபுரி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டறம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் மகேந்திரன் (52). தர்மபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர். நேற்று சென்னை தி.நகரில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் மகேந்திரன் கலந்து கொண்டார்.
அவருடன் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த அருண் (22), ராஜசேகர் (25), தமிழ் (24) உடன் சென்றிருந்தனர். கூட்டம் முடிந்ததும் நேற்று இரவு காரில் புறப்பட்டனர். டிரைவர் வெங்கடேஷ் காரை ஓட்டி வந்தார்.
நள்ளிரவு 2 மணிக்கு வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி லெட்சுமிபுரம் என்ற இடத்தில் சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கம்பியில் மோதி கவிழ்ந்தது.
இதில் மகேந்திரன் மற்றும் டிரைவர் உள்பட 5 பேரும் படுகாயமடைந்தனர்.
நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் பரிதாபமாக இறந்தார்.
நாட்டறம்பள்ளி போலீசார் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் மகேந்திரன் (52). தர்மபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர். நேற்று சென்னை தி.நகரில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் மகேந்திரன் கலந்து கொண்டார்.
அவருடன் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த அருண் (22), ராஜசேகர் (25), தமிழ் (24) உடன் சென்றிருந்தனர். கூட்டம் முடிந்ததும் நேற்று இரவு காரில் புறப்பட்டனர். டிரைவர் வெங்கடேஷ் காரை ஓட்டி வந்தார்.
நள்ளிரவு 2 மணிக்கு வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி லெட்சுமிபுரம் என்ற இடத்தில் சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கம்பியில் மோதி கவிழ்ந்தது.
இதில் மகேந்திரன் மற்றும் டிரைவர் உள்பட 5 பேரும் படுகாயமடைந்தனர்.
நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் பரிதாபமாக இறந்தார்.
நாட்டறம்பள்ளி போலீசார் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X